Posts

Showing posts from May, 2016

உலகின் மிக ஆபத்தான டாப் 10 ஹேக்கர்கள்....!!!!!!!

Image
எது பெஸ்ட்..? எது வேஸ்ட்.? என்பதை தேர்ந்தெடுப்பதில் நம் எல்லோருக்குமே குழப்பம் வர தான் செய்யும். அது போன்ற தருணங்களில் நம் அனைவரின் மண்டைக்குள்ளும் உதிக்கும் ஒரு ஐடியா தான் - டாப் 5 அல்லது டாப் 10. அப்படியாக டாப் ஸ்மார்ட்போன்கள், டாப் ஆப்ஸ்கள், அவ்வளவு ஏன் டாப் ஆன்லைன் வைரல்களை கூட நாம் கண்டிருப்போம். ஆனால், உலகின் மிக ஆபத்தான ஹேக்கர்களை பற்றி டாப் 10-தனை பார்த்திருக்க வாய்ப்பில்லை..!    ஊள்ளூர் பணக்காரனின் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி உலக நாடுகளின் அதிபயங்கர ரகசியங்கள் என எலாவற்றையும் பாரபட்சம் பார்க்காமல் புகுந்து விளையாடும் உலகின் மிக ஆபத்தான டாப் 10 ஹேக்கர்களை பற்றிய தொகுப்பே இது, ஆனால், இவனுங்க முகத்த பார்த்தா அதுக்குலாம் சரிபட்டு வர மாட்டானுங்க என்பது போல தெரியும். ஆனால், கில்லாடிகள்..!     #10 கேரி மெக்கின்னான் (Gary McKinnon) :    நாசாவின் ரகசியங்களையே ஹாக் செய்து கிளப்பி விட்ட கணினி அமைப்பு நிர்வாகி..!           #09 மைக்கேல் பேவன் மற்றும் ரிசார்ட் ப்யைஸ் (Michael Bevan and Richard Pryce) :    சட்டவிரோதமாக, அமெரிக்க விமானப்படை , நாசா

Offers

1.Offers- State bank 2. OnePlus Loop VR Headset Rs. 1 – Amazon

எகிப்து பிரமிடை விட உயரமான சுனாமி அலைகள், பூமியில் இல்லை..!

Image
விஞ்ஞானிகள் குழு ஒன்று, எக்ஸ்டிராடெரஸ்ட்ரியல் பிளானட்டில் (பூமி அல்லாத வேறு கிரகம்) ஏற்பட்டுள்ள சுனாமியின் முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது..! ஒருவேளை அந்த நிலப்பரப்பின் பேரழிவிற்கு சுனாமி காரணமாக இருக்கலாம். எகிப்தின் மாபெரும் பிரமிட் ஆன கிசாவை விட உயரமான கடல் அலைகள் அங்கு எழுந்துள்ளது. அந்த சுனாமியை பூமி கிரகத்தில் ஏற்படும் சுனாமிகளுடன் விஞ்ஞானிகள் ஒப்பீடு செய்கின்றன..! நிலப்பேரழிவு : மாபெரும் நிலப்பேரழிவை ஏற்படுத்திய அந்த மெகா சுனாமிகள் ஆனது, நம்ப முடியாத வண்ணம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ளன. ஆதாரம் : பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவிலான சுனாமி வெளிப்படுத்தப்பட்ட ஆதாரம் உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. வானியல் மற்றும் புவியியல் குழு :  டஸ்கன் கிரக அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஜெ அலெக்சிஸ் ரோட்ரிக்ஸ் தலைமையில் கீழ் ஆய்வு மேற்கொண்ட வானியல் மற்றும் புவியியல் குழுவானது இந்த கண்டுப்பிடிப்பை நிகழ்த்தியுள்து. மெகா சுனாமிகள் : சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தனித்தனி மெகா சுனாமிகள் சிவப்பு கிரகத்தின்

ஆண்ட்ராய்டு தெரியும், ஆனால் ஆண்ட்ராய்டு பற்றி இதெல்லம் தெரியுமா.?

Image
உலகளவில் அனைவரும் அறிந்த இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கின்றது, இன்றைய ஸ்மார்ட்போன் கருவிகளில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருக்கின்றது எனலாம். இந்தளவு பிரபலமான ஆண்ட்ராய்டு இயங்குதளம் குறித்து பலருக்கும் தெரிந்திராத சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..  ஆண்ட்ராய்டு 2015 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலாக உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் சுமார் 81% கருவிகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  ஆண்ட்ரயாடு  2017 ஆம் ஆண்டு உலகெங்கும் விற்பனை செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் சுமார் 84% கருவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும்.  ஆண்ட்ராய்டு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இதுவரை சுமார் 3,100 கோடி வரை ஈட்டியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இருந்து இது வரை லாபம் மட்டும் சுமார் 2,200 கோடியை கூகுள் ஈட்டியுள்ளது. பணம்  ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் கூகுள் நிறுவனம் இரு வழிகளில் பணம் ஈட்டுகின்றது. ஒன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் வழங்கும் விளம்பரங்கள், இரண்டாவது கூகுள் ப்ளே

ஐபோன் விலை ரூ.50,000, அன்லாக் செய்ய ரூ.89 கோடி.!

Image
அமெரிக்காவில் கொலையாளி பயன்படுத்திய ஐபோன் கருவியை அன்லாக் செய்ய அதிகளவு பணம் செலவழித்திருப்பதாக அமெரிக்க புலன் விசாரனை கூட்டாட்சி பணியகத்தின் (எஃப்பிஐ) தலைவர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.  அதன் படி அன்லாக் செய்தவருக்கு கோமி மீதம் இருக்கும் தன் வாழ்நாளில் சம்பாதிக்க இருக்கும் பணத்தை இந்த வழக்கிற்காக வழங்கி இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.  வருமானம்  எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நிதி மற்றும் நிர்வாக அலுவலக தகவல்களின் படி கோமியின் வருமானம் ஜனவரி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் $183,300 ஆக இருந்தது.  எதிர்காலம் கோமி மீதமிருக்கும் தன் பணி காலத்தில் மொத்தம் $1.34 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.89,351,133 வரை சம்பாதிப்பார் என கணக்கிடப்பட்டுள்ளது.  ஹேக்கிங்  ஹேக்கிங் செய்ததற்கு எஃப்பிஐ இதுவரை இல்லாத அளவு அதிக பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக போனினை ஹேக் செய்ய ரூ.6,66,79,950 வழங்கப்பட்டது அதிகபட்ச தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  அஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம் லண்டன் நகரின் அஸ்பென் பாதுகாப்ப

ஏரியா 51 : மர்மமும், வெளியான பதில்களும்.!

Image
உலகின் மிகவும் ' மர்மம் ' நிறைந்த பகுதியாக அறியப்படும் ' ஏரியா 51 ' இல் அப்படி என்ன தான் இருக்கின்றது. அங்கு என்ன தான் நடக்கின்றது என்ற கேள்விகளுக்கு இன்று வரை அதிகாரப்பூர்வமான, தெளிவான பதில் இல்லை. இங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத ' பறக்கும் பொருள் ' வந்து செல்கின்றது. இப்பகுதியில் ' ஏலியன்களின் ' நடமாட்டம் இருக்கின்றது என ஒருப்பக்கமும், மற்றொரு தரப்பினர் இங்கு ராணுவ சோதனை மையம் இயங்கி வருகின்றது என்றும் பலத்தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இங்கு ' ஏரியா 51 ' குறித்து பலருக்கும் தெரியாத சில தகவல்களை தான் தொகுத்திருக்கின்றோம்.. பெயர் ' ஏரியா 51 ' பகுதியின் உண்மை பெயர் நெவேடா டெஸ்ட் அன்டு டிரெயய்னிங் ரேன்ஜ் ஆகும். இப்பகுதியில் ' இரண்டாம் உலக போரின் ' போது அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது. பலகை இப்பகுதியில் 1 முதல் 30 வரை பெயர் பலகைகள் இருக்கின்றன. தற்சமயம் ' ஏரியா 51 ' என அழைக்கப்படும் இடத்தில் 15 ஆம் எண் இருந்தது என்றும் பின்னாளில் இது ' ஏரியா 51 ' என அழைக்கப்பட்டு வருவதாக கூறப